கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில், செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 25 ஆண்டு காலமாக தனியாக வாழ்ந்து வந்த முதியவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாதிரிவேடு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்கொலை செய்து கொண்ட முதியவருக்கு, மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.