கும்மிடிப்பூண்டியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-25 15:06 GMT

கும்மிடிப்பூண்டியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சிஐடியு அமைப்பை  சேர்ந்த அர்ஜுனன் தலைமையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கடுமையாக பெட்ரோல் விலையை உயர்த்தி  வருவதால் இந்த உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  கும்மிடிப்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News