கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் கடையை உடைத்து 300 கிலோ காப்பர் திருட்டு - போலீசார் விசாரணை.

Update: 2021-06-30 04:13 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவர் அதே பகுதியில் காயில் கட்டும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர் உள்ளே புகுந்து 300 கிலோ காப்பர் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News