பெரிய ஒபுலபுரம் தடுப்பூசி முகாம்: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ துவக்கினார்

பெரிய ஒபுலபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாமினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-25 08:51 GMT

பெரிய ஒபுலபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாமினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுலபுரம் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று இன்று, கொரோனா தடுப்பூசி முகாமினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர். இந்த நிகழ்வு பெரிய ஒபுலபுரம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பு எட்டியுள்ளது.

Tags:    

Similar News