அம்பேத்கர் பிறந்த நாள்: பெரியபாளையத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-04-15 02:00 GMT

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியபாளையத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு.

அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்று திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட வர்த்தக அணியைச் சேர்ந்த தனசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், முன்னாள் பெரிய பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News