வாகன சோதனையில் 3 பேரிடம் 30 சவரன் நகை பறிமுதல்

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் ஈடுபட்ட 3 பேர் போலீசார் கைது செய்து 30சவரன் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-09-02 10:30 GMT

கைது செய்யப்பட்ட மாரி, நாகராஜ், சிவா 

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போதெல்லாம் அரங்கேறி வந்தன. கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில். கும்மிடிப்பூண்டியில் நேற்று போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் மூவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது   முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனையடுத்து மூவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் கொள்ளையை அரங்கேற்றியவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து (மாரி வயது 39), (நாகராஜ் வயது 36), (சிவா வயது 38) ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 30சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News