பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்

பெரியபாளையத்தில் ஸ்ரீ பார்வதி தேவி திட்டியம்மன் கோவிலில் 7 ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா முன்னிட்டு 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-05-24 03:00 GMT

பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

பெரியபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ பார்வதி தேவி திட்டி அம்மன் கோவிலின் 7ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில்150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பார்வதி தேவி திட்டி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் கிராம மக்களின் பங்களிப்புடன் புதிதாக கோவிலை கட்டி கும்பாபிஷேகம் அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக நிறைவு நாள் முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் 7ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளை இன்று விரதம் இருந்து 108.பெண்கள் அதிகாலை நீராடி மஞ்சள் ஆடைகளை அணிந்து அங்குள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து தலையில் பால்குடம் தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க,ஓம் சக்தி, பராசக்தி என்ற விண்ணை பிளக்கும் விதமாக கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ பார்வதி தேவி திட்டி அம்மன் திருக்கோவிலுக்கு வந்தடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சுமந்து வந்த 108 பால் குடங்களில் உள்ள பாலை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பல்லாக்கில் வைத்து கோவிலை சுற்றி மூன்று முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.பெரியபாளையத்தில்

Similar News