மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!

தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தார்.

Update: 2024-03-27 14:06 GMT

தூயமல்லி பாரம்பரிய நெல் சாகுபடி வயதினை வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி கீழக்குறிச்சியில் ஆய்வுசெய்தார்

மத்திய திட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி மதுக்கூர் வட்டாரத்தில் மேற்கொண்ட ஆய்வில், கொச்சின் போர்டு திட்டத்தின் கீழ் இயற்கை உர சாகுபடி ஊக்குவிக்கும் பொழுது மானியத்தில் கட்டப்பட்ட

1200 கன அடி மண்புழு உரத் தொட்டியினை காசாங்காடு பாலசுப்பிரமணியன் வயலில் ஆய்வு செய்தார். பின்னர் நிலக்கடலை ஜி ஜி 34 ரக ஆதார விதை பண்ணையை பார்வையிட்டு நிலக்கடலை ஆதார விதை விடுபாடு இன்றி கொள்முதல் செய்யக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தினைஆய்வு செய்து தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் நெல் நுண்ணூட்டத்தினை வேப்பங்குளம் விவசாயி வீர சுப்பிரமணியனுக்கு வழங்கினார். கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாயி ரவி வயலில் அமைக்கப்பட்ட வயலை ஆய்வு செய்து விவசாயிகள் உரச்செலவை குறைத்து இயற்கை முறையில் மண்புழு உரத்தினை பயன்படுத்திட கேட்டுக் கொண்டார். 


பின் கீழக்குறிச்சி விவசாயி ராமமூர்த்தி வயலில் நிலக்கடலை ஆதார விதை பண்ணைகளை ஆய்வு செய்து அறுவடை நிலையில் உள்ள பயிர்களில் எவ்வளவு நிலக்கடலை உள்ளது என்பதை ஆய்வு செய்தபின் கீழக்குறிச்சி வேளாண் விரிவாக்கம் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் உதவி விதை அலுவலர்கள் இளங்கோ, பூபேஷ் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் திட்ட பணிகள் முடிவுற்ற விபரத்தினை எடுத்துக் கூறினார். 

Tags:    

Similar News