இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் விநியோகம்

கிராம மக்களுக்கு தோல் நோய் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

Update: 2023-01-07 09:00 GMT

 இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் வினியோகத்தை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் விநியோகத்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் வினியோகத்தை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை  மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்க் குழாயில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தினார்.

மாற்று ஏற்பாடாக சிறுமின்விசைத் தொட்டி மூலம் அந்த மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், புதிய குடிநீர்க் குழாய்மூலம் வேங்கைவயல் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. புதிய குழாய்மூலம் வழங்கப்பட்ட குடிநீரை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை  மக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைச்சாமி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறையூர் வேங்கையூரில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்:

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கையூர் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பாக குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ முகாம் வேங்கைவயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் டி.சலோமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தோல் நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி  கிராம மக்களுக்கு  பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். இம்முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News