சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

கீரனூர் அருகே மர்ம நபர்களால் சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

Update: 2021-05-04 11:27 GMT

சாலையில் வீசப்பட்ட கற்சிலையுடன் வட்டாட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகே குளத்தூர் செல்லாயி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக் கோவிலுக்கு அருகே அம்மன் கற்சிலை ஒன்றை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர்.

இச்சிலையை கண்ட அப்பகுதி மக்கள் உடனே குளத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலரான சத்தியமூர்த்தி ,சிலை வீசப்பட்ட இடத்திற்கு சென்று சிலையை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, இச்சிலையானது குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News