நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் மெல்லினத் தமிழ் மன்ற துவக்க விழா

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் மெல்லினத் தமிழ் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2024-07-05 02:00 GMT

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் மெல்லினத் தமிழ்மன்றத்தை சினிமா பாடலாசிரியர் முத்துலிங்கம் துவக்கி வைத்தார். அப்போது அனைவரும் அவருடன் குரூப் படம் எடுத்துக்கொண்டனர்.

நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள டிரினிடி நகரில், டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாண்டு மாணவியர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் துவக்க விழா மற்றும் கல்லூரி வெள்ளி விழா ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

கல்லூரி சேர்மன் தென்பாண்டியன் நல்லுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மூத்த சினிமா பாடலாசிரியர் முத்துலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியின் மெல்லினத் தமிழ் மன்றத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது, டிரினிடி கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு, கல்லூரியில் பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தும் நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அனைவரும் அவருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் லட்சுமி நாராயணன், உயர் கல்வி இயக்குனர் அரசு பரமேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News