ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,800 கனஅடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

Update: 2021-04-19 11:45 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலமாக மழை பெய்து வருகிறது. அதே போன்று தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று (ஏப்ரல் 19) காலை நிலவரப்படி வினாடிக்கு 4800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நீரின் அளவை தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எனினும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.


Tags:    

Similar News