கோவை அருகே கோவில்பாளையத்தில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வியாபாரி கைது

கோவை கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-08-30 15:15 GMT

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கோவில்பாளையம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் அத்திப்பாளையம் - கீரணத்தம் சாலை அருகே சென்று சோதனை மேற்கண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரா என்கிற வீரக்குமார் (34) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News