கோவை வாளையாறு எல்லையில் கோழிக்கழிவு கொட்டியவருக்கு ரூ 50 ஆயிரம் அபராதம்

வாளையாறு எல்லையில் கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு ரூபாய் 50ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-04-29 10:30 GMT

கோவை வாளையாறு பகுதியில் கேரளாவில் இருந்து எடுத்து வந்து கொட்டிய வாகனம்

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50ஆயிரம் அபராதம் விதித்தது.

கோவை மாவட்ட எல்லை பகுதியான வாளையாறு பகுதியில் அடிக்கடி கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு மர்ம நபர்கள் கொட்டி வந்தனர். இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. புகார்களின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளா-கோவை எல்லையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் இது குறித்து கேட்ட போது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர். இதை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியதை அடுத்து அந்த நபர் மீண்டும் கோழி கழிவுகளை ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு இளைஞர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வாகனத்தில் கோழி கழிவுகளை எடுத்து வந்து வாளையார் எல்லையில் கொட்டிய கேரளா மாநிலம் திருச்சூர் சேர்ந்த ராஜு என்பவருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலில் பெயரில் மாவூத்தம்பதி ஊராட்சி சார்பில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News