தடாகம் பகுதியில் 221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

தடாகம் பகுதியில் 221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-12 12:19 GMT

- கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக தடாகம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தடாகம் காவல் காவ‌ல் துறை‌யின‌ர் திருவள்ளுவர் நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (47) மற்றும் துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2,20,000/- மதிப்புள்ள 221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 116 நபர்கள் மீது 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 3329.17 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News