உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை நடத்தியது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ரேஸ்கோர்ஸ் வழியாக சிஎஸ்ஐ பள்ளியில் நிறைவடைந்தது. இதில் PSG, KG, KMCH நர்சிங் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியை தொடர்ந்து மாசானிக் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரிகள், மாவட்ட குடும்ப நலச் செயலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் குடும்பங்களைத் திட்டமிட உதவும் பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்கள் தங்கள் குடும்பங்களைத் திட்டமிடவும், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஊக்குவிக்க உதவு என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வும் குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகையில்,: உலக மக்கள் தொகை 2050ல் 9.7 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.2023ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மக்கள்தொகை வளர்ச்சி உணவு, நீர் மற்றும் ஆற்றல் போன்ற வளங்களில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு ஒரு முக்கியமான கருவியாகும்.மக்கள் தங்கள் குடும்பங்களைத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில் அரசு திட்டங்கள் பல உள்ளன. இந்தியாவின் நிலையான எதிர்காலத்தை உருவாக்க இந்த நிகழ்வு உதவும் எனவும் குறிப்பிட்டனர்.