கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலைத்தொழிலாளர்கள்

மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவோம்

Update: 2023-04-20 07:30 GMT

கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிசி பாஞ்சாலைகளின் தொழிலாளர்கள் கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய பஞ்சாலை கழகத்தின் என்டிசி ஆலைகளின் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள என்டிசி பஞ்சாலையின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற   கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், முழு சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மூன்று ஆண்டு போனஸ் இதர பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பேசிய இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், தமிழக அரசு நிதியிலிருந்து என்டிசி தொழிலாளர்களுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும். தங்களது போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

Tags:    

Similar News