புளியகுளத்தில் செப்டிக் டேங்க் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

Coimbatore News- கோவை புளியகுளத்தில் செப்டிக் டேங்க் லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2024-10-12 08:45 GMT

Coimbatore News- வாலிபர் கைது ( மாதிரி படம்)

Coimbatore News, Coimbatore News Today- கோவை புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் மருதாசலம். இவர் சௌரிபாளையம் சாலையில் இன்று காலை தனது நண்பருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி உள்ளது. பின்னர் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த மருதாசலம் மற்றும் அவர் நண்பர் மீதும் அந்த செப்டிக் டேங்க் லாரி மோதியது.

இதில் செப்டிக் டேங்க் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது மருதாசலம் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த மருதாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செப்டிக் டேங்க் லாரியை இயக்கிய பிரவீன் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News