/* */

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்

ஆவடி மத்திய பாதுகாப்புபடை ஊழியர்களுக்கு தடுப்பூசி மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்
X

ஆவடி பாதுகாப்பு படை ஊழியர்களுக்கு கொரோன தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஆவடி மாநகராட்சி கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா தடுப்பு மையம் என தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஆவடியில் செயல்படும் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளான எச்.வி.எப், ஓ.சி.எப், எஞ்சின் பேக்டரி ஆகிய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆவடி மாநகராட்சியில் உள்ள பாதுகாப்பு தொழிற்சாலையில் பணியாற்றக் கூடிய 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிப் போட இந்த தடுப்பூசி மையம் துவக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 26 May 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!