ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின் உரிமைகளை மீட்கும்

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற  உத்தரவு: மாநில அரசுகளின் உரிமைகளை மீட்கும்
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை அரசுகள் ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு, குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.


கவுன்சில் அதன் பரிந்துரைகளை பின்பற்றுமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்த முடியாது, என்றார். ஆளுநரின் சம்பிரதாய ஒப்புதலுக்காக மாநில அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர்கள் முடிவு செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிறகு என்ன தேவை உள்ளது

அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கவை. ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி உள்ளது. . மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது.

வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்து உள்ளோம். மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. மாநில சட்டமன்ற உரிமைகளை உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வழியாக மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai in future agriculture