குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
X

தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பெயரளவுக்கு பணிகளை தொடங்கி, ஓராண்டாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையே உள்ளது. 

குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டாக கிடப்பில் கிடக்கும் குடிநீர் தொட்டியால், மக்களின் அவதி தொடர்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டுக்கு முன்பு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 3 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான அத்திவாரம் மட்டுமே போடப்பட்டது. அதன்பிறகு, இன்று வரை எவ்விதமான கட்டுமானமோ, தண்ணீர் தொட்டியோ கட்டப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் தொட்டி பணி என்ன ஆயிற்று? அதற்கென்றே ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது? பணி ஏன் முடங்கி உள்ளது என்று தெரியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்றனர்.

கட்டுமானப்பணி இடத்தை, அரசு அதிகாரிகள் பார்வையிட வில்லை. இனியேனும் இப்பகுதியை ஆய்வு செய்து, முடங்கியுள்ள தண்ணீர் தொட்டி பணிகளை தொடங்க வேண்டும்; அதன் மூலம் தங்களது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
‘அதிமுகவிற்கு தேசிய பார்வை உள்ளது’- பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்
குளித்தலை பகுதியில் மகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு பிரச்சாரம்
மண்ணச்சநல்லூர், முசிறியில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு நாளை பிரச்சாரம்
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்
கடத்தப்பட்ட பெரம்பலூர் அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா?
பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13.40 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
ai in future agriculture