/* */

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டாக கிடப்பில் கிடக்கும் குடிநீர் தொட்டியால், மக்களின் அவதி தொடர்கிறது.

HIGHLIGHTS

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
X

தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பெயரளவுக்கு பணிகளை தொடங்கி, ஓராண்டாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையே உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டுக்கு முன்பு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 3 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான அத்திவாரம் மட்டுமே போடப்பட்டது. அதன்பிறகு, இன்று வரை எவ்விதமான கட்டுமானமோ, தண்ணீர் தொட்டியோ கட்டப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் தொட்டி பணி என்ன ஆயிற்று? அதற்கென்றே ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது? பணி ஏன் முடங்கி உள்ளது என்று தெரியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்றனர்.

கட்டுமானப்பணி இடத்தை, அரசு அதிகாரிகள் பார்வையிட வில்லை. இனியேனும் இப்பகுதியை ஆய்வு செய்து, முடங்கியுள்ள தண்ணீர் தொட்டி பணிகளை தொடங்க வேண்டும்; அதன் மூலம் தங்களது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 15 Sep 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?