நாமக்கல் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கல்
![நாமக்கல் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கல் நாமக்கல் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கல்](https://www.nativenews.in/h-upload/2021/08/17/1247452-collector.webp)
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட, தனிக்கைத்துறை அலுவலகத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் கேடயம் வழங்கி பாராட்டினார்.
By - P.Nathan, Reporter |17 Aug 2021 11:45 AM GMT
தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு கேடயம் பரிசு.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019ம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட தனிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு கேடயம் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) ஜோதி, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், தணிக்கைத் துறை உதவி இயக்குநர் ரேணுகா மற்றும் தணிக்கைத் துறை பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu