மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான  தங்க கட்டிகள் பறிமுதல்
X

பைல் படம்.

துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ரூ. 2.44 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ தங்கத்தை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.

மதுரை விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பயணி ஒருவரின் சூட்கேஸ் கேட்பாராற்று இருந்ததை எடுத்த சோதனை செய்தனர். இதில், 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தது.

இதன் மதிப்பு 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை கைப்பற்றி யாருடையது என்று விமானத்தில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்தபோது, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .

Tags

Next Story
Similar Posts
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மதுரையில் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு அபராதம் : மாநகராட்சி ஆணையாளர்..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
மதுரை கோயில்களில், சுவாதி நட்சத்திர விழா!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ஃபோன் ரீசார்ஜ் விலை குறையுதா? பயனர்களுக்கு நல்ல செய்தி வருதுடோய்..!
மதுரையில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு : அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!
ai in future agriculture