காரியாபட்டி நூலகத்தில் உலக புத்தக தினவிழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை

Update: 2022-04-24 08:45 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில்  நடைபெற்ற உலக புத்தக தின விழாவுக்கு திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும் செல்வலட்சுமி தலைமை வகித்தார்.  ஆசிரியைரமாபிரபா முன்னிலை வகித்தார். இருவரும் புத்தக வாசிப்பு பற்றியும், நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். 'நூலகத்தின் பயன்பாடு' பற்றி மாணவிகள் நந்தினி, காவ்யா மற்றும் மாணவர் விஷால் ஆகியோர்,  பேசினர்.இவர்கள் மூன்று பேருக்கும் நூலகர் பாஸ்கரன் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

திருச்சுழி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஃபாத்திமா உதவியுடன், இந்நிகழ்ச்சியை நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர்.அழகேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில், நூலகப் பணியாளர்கள் பாண்டிதேவி, குமார், மஞ்சுளா மற்றும் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். .இதன் தொடர்ச்சியாக, நூலகத்தில் மாணவ,மாணவிகள் பங்களிப்புடன் புத்தகக் கண்காட்சியும்  நடைபெற்றது.

Tags:    

Similar News