காரியாபட்டியில் பாரதம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா
Tree sapling ceremony at Kariyapatti
காரியாபட்டி பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக வாரந்தோறும் விடுமுறை தினத்தன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காரியாபட்டி கிழவனேரி கருப்பணசாமி கோவில் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கருப்பணசாமி கோவில் நிர்வாகி தலைமை வகித்தார்.போலீஸ் காவலர் குமரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரசமரம், வேப்பமரம், இலுப்பை. பூ பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், முன்னாள் விமானபடைவீரர் ரமேஷ் , ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர். சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், பொறியாளர் கண்ணன், அன்னை தெரசா இளைஞர் மன்ற தலைவர் அருண்குமார், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.