சாத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

சாத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-16 02:45 GMT

பாக்கியராஜ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டி என்ற பாக்கியராஜ் (39). கூலி வேலை பார்த்து வரும் இவர், 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், பாக்கியராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில், சிறையில் இருக்கும் பாக்கியராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News