17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

Update: 2022-04-07 08:23 GMT

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தைகளால் அவனியாபுரம் சக்தீஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த 42 வயதான முனியாண்டி என்பவர் மீது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், முனியாண்டியை கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிரையிலடைத்தனர்.

Tags:    

Similar News