சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழிப்பு

சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழித்தனர்.

Update: 2022-04-07 08:11 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணபேரி கிராமத்தில், ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்காட்டு பகுதி மற்றும் அந்தப்பகுதியில் இருந்த வைக்கோல் படப்புகளில் ஏராளமான விஷ வண்டுகள் இருந்தது. அந்த வழியாக சென்ற 3 பேரை விஷ வண்டுகள் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விஷ வண்டுகளை தீயிட்டு அழித்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, அந்தப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News