விருதுநகர் அருகே தீயில் கருகி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு

விருதுநகர் அருகே தீயில் கருகி மூதாட்டி பரிதாப உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-20 14:44 GMT

பைல் படம்.

விருதுநகர் அருகேயுள்ள வி.குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமியம்மாள் (90). குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், மூதாட்டி லட்சுமியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக லட்சுமியம்மாள் சேலையில் தீப்பிடித்தது. வயது மூப்பின் காரணமாக அவரால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதனால் அவரது உடல் முழுவதும் தீக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று, லட்சுமியம்மாள் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News