சிவகாசி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்காெலை

சிவகாசி அருகே வடமாநில தொழிலாளர்கள் குடிபோதையில் தகராறு. வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை.

Update: 2022-04-13 14:53 GMT

சிவகாசி அருகே, வடமாநில தொழிலாளர்கள் போதையில் தகராறு. கத்திக் குத்தில் ஒருவர் படுகொலை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் அன்னப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செந்தில்ஆனந்த் (36). இவர் சிவகாசி - விருதுநகர் சாலையில் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இலிமுதீன்அகமது (37) என்பவரும், திபங்கர்களிட்டா (33) என்பவரும் அலுவலக வளாகத்தில் உள்ள தங்கும் இடத்தில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தவர்கள் சண்டையை விலக்க முயற்சித்தனர். ஆனாலும் இருவரும் கத்தியை எடுத்து ஒருவரையொருவர் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த திபங்கர்களிட்டா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த இலிமுதீன்அகமது மயங்கி விழுந்தார்.

சம்பவம் கேள்விப்பட்ட திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, தீபங்கர்களிட்டா உடலை மீட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட இலிமுதீன்அகமதுவிற்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News