காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

விருதுநகர் மாவட்ட தி.முக மருத்துவ அணி சார்பில் காரியாபட்டியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 10:22 GMT

காரியாபட்டி அருகே, திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

காரியாபட்டி: 

தி.மு.க மருத்துவர் அணி சார்பில் நீர்-மோர் பந்தல் திறந்து வைக்கப பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட - தி.மு.க , மருத்துவர் அணி சார்பில் நீர் - மோர் பந்தல் வரலொட்டியில் திறந்து

வைக்கப்பட்டது. மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். சண்முக நாதன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப் பாளர் போஸ் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி ,மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் செல்வராணி., மாரிதாஸ் மாவட்ட பிரதிநிதி, மாரிதாஸ், ஹரி கிருஷ்ணன் ஒன்றியக் கவுன்சிலர் ஹரி கிருஷ்ணன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர், முத்துக் குமார் திமுக பிரமுகர்கள் ரத்தினம் , செல்லத்துரை ,கேசவன்உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை .விருதுநகர் மாவட்ட, திமுக, சார்பில் ஊர்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கு மக்களின் தாகம் தீர்ப்பதற்கு நீர் மோர், குடிநீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை வழங்குவதற்கு திமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News