அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

அருப்புக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திட்டத்துக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்;

Update: 2022-07-06 13:30 GMT

அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை நகரம் என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்றனர்

அருப்புக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திட்டத்துக்கான உறுதிமொழி  ஏற்றுக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதிகளில், தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு என் குப்பை என் பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகர்நல அலுவலர் ராஜநந்தினி முன்னிலையில், அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் தூய்மை நகரம் என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்றனர். மேலும் பள்ளியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News