முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: விருதுநகரில் போலீசார் அஞ்சலி

இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-09 16:41 GMT

இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவிற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ராஜபாளையம் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News