ஆக்கிரமிப்பை அகற்றி வாரச்சந்தை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காரியாபட்டி காவலர் குடியிருப்பு அருகே ஆக்கிரமிப்புக் களை அகற்றி வாரச்சந்தை அமைக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மனு;

Update: 2022-09-20 11:15 GMT

காரியாபட்டி காவலர் குடியிருப்பு அருகே ஆக்கிரமிப்புக் களை அகற்றி வாரச்சந்தை அமைக்க கோரி பொதுநல அமைப்புக்கள் சார்பாக எஸ்.பி எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி பேரூராட்சி சேர்மன் செந்திலிடம் மனு கொடுத்தார்.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், தமிழ்நாடு மாவட்ட, நகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் என நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நிறைய சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும், பொதுவிடங்களைச் சொந்தம் கொண்டாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. பொதுச்சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு எதிராக ஆங்காங்கே சில குரல்கள் எழுந்து கொண்டும்தான் இருக்கின்றன.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவலர் குடியிருப்பு அருகே ஆக்கிரமிப்புக் களை அகற்றி வாரச்சந்தை அமைக்க கோரி பொதுநல அமைப்புக்கள் சார்பாக எஸ்..பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, பேரூராட்சி சேர்மன் செந்திலிடம் மனு அளித்தார்.

Tags:    

Similar News