மல்லாங்கிணறு பேரூராட்சியில் தூய்மைப் பணி விழிப்புணர்வு பிரசாரம்
Cleaning Awareness Campaign in Mallanginaru Town Panchayat;
மல்லாங்கிணர் பேருராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது
மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பாக, தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சார, பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி சார்பாக தமிழக முதல்வரின் உத்தரவின பேரில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி பிரசாரம், மற்றும், தீவிர துப்பரவு துப்பரவு பணிகள நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மிக்கேலம்மாள் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நம் நகரத்தை தூய்மையாகவும், பிளாஸ்டிக்கழிவுகள் இல்லாத நகரமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர. மல்லாங்கிணறு பேரூராட்சி வார்டுகள். தோறும் விழிப்புணர்வு பிரசாரம். செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வீடுவீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், பொதுகழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. நமது நகரத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகள் பயன்படுத்த வலியுறுத்தி வியாபாரிகள், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.