காரியாபட்டியில் புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி: அமைச்சர் துவக்கி வைப்பு

காரியாபட்டியில், புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-13 12:14 GMT

காரியாபட்டியில், புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

காரியாபட்டியில், புதிய வழித்தடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியிலிருந்து கடமங்குளம் - சத்திரம் புளியங்குளம், தாமரைக்குளம் வழியாக காரைக்குளம், முடுக்கங்குளம் வழியாக மறைக்குளம் ஆகிய இடங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்கள் துவக்க விழா காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய வழித்தடங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் பேருராட்சி தலைவர் செந்தில், துணைத் தலைவர் ரூபி சந்தோசம், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாகத் அலி, செல்வராஜ், முகமது முஸ்தபா, தீபா, நாகசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News