பட்டுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டி படுகொலை

பட்டுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-05-04 14:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம்,33., விவசாயி. இவருடைய தம்பி ஆனந்த்குமார். கடந்த 2017ம் ஆண்டு ஆனந்த்குமாருக்கும், அதை ஊரை சேர்ந்த ரித்தீஸ் என்பவருக்கும் தகராறில், ரித்தீஸ் கையை ஆனந்தகுமார் வெட்டியதில் ரீத்தீஸ் கையில் காயம் ஏற்பட்டடுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது .

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணிக்கவாசகம் வயலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிய நிலையில், சின்னாத்தங்கரை என்ற இடத்தில், மாணிக்கவாசகத்தை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திலேயே மாணிக்கவாசகம் இறந்தார். இது குறித்து தகவலறிந்த மதுக்கூர் போலீசார், மாணிக்கவாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News