பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது.

Update: 2022-02-17 11:45 GMT

ஆசிரியர் ராஜ்குமார்.

மதுக்கூர் அரசு பள்ளியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார் வயது 52. இவர் அதே பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து மதுக்கூர் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மதுக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் மற்ற பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News