பட்டுக்கோட்டையில் ரேக்ளா ரேஸ்: குதிரை, மாட்டு வண்டிகள் பங்கேற்பு

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், திரளான குதிரை, மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

Update: 2022-05-03 04:30 GMT

வேப்பங்குளத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரை, மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரியமாடு, கரிச்சான் குதிரை, கரிச்சான் மாடு, புது குதிரை, நடு மாடு, பெரிய குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

தஞ்சை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றிபெற்ற குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி வீரர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News