மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மதுக்கூர் கிழக்கு அதிமுக ஒன்றிய அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

Update: 2021-07-22 04:30 GMT

மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த, மதுக்கூர் பகுதி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில் (56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்கள் உதவியுடன்  காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சென்னையில்,செந்திலை கைது செய்தனர்.  இந்நிலையில் துரை.செந்திலை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தஞ்சை மாவட்ட ஆட்சியர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்க்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து துரை.செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதன் பேரில் துறை செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News