தஞ்சையில் நீரில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய்

தஞ்சையில் நீரில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-17 06:30 GMT

உயிரிழந்த ஸ்டெல்லா.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா வயது 47.

இந்நிலையில் ஸ்டெல்லா அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தன்னுடைய இரு மகள்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கரையில் நின்று குளித்துக் கொண்டிருக்கும்போது, இளையமகள் பெனினால் தண்ணீரில் திடீரென மூழ்கினார். இதனை அடுத்து மூத்த மகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற வேளையில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா, உடனடியாக தண்ணீரில் இறங்கி மகள்கள் இருவரையும் கரைப்பகுதியில் தூக்கி போட்டுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வந்து இந்த இரு பெண் குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஸ்டெல்லா தண்ணீரில் மூழ்கி கைகள் மட்டும் வெளியில் தெரிய அந்த இளைஞர்கள் நீச்சல் அடித்து சென்று ஸ்டெல்லாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News