நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
குளத்தில் குளிக்கும் போது வலிப்பு ஏற்பட்டதால், நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு.;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவருடைய மகன் உதய குமார் வயது 30. இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு குளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கி இறந்த இளைஞர் உதயகுமார் உடலை மீட்டனர். பின்னர் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.