பொன்னமராவதி போரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்
Today Pudukkottai News- பொன்னமராவதி போரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகித்த 12வது வார்டு உறுப்பினர் ராஜா
Today Pudukkottai News- பொன்னமராவதி பேருராட்சி பகுதியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் வழங்கப்பட்டது..
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருராட்சி சார்பில் 12 வது வார்டு பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் உத்தரவின்படி செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆலோசனையின்படி, பனிரெண்டாவது வார்டு பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று, டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பகுதியிலுள்ள பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வார்டு உறுப்பினர் ராஜா, கபசூரண கசாயத்தை விநியோகித்தார். இதில் பேரூராட்சியின் டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2