தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் மயக்கம்: மரத்திலேயே தாெங்கிய பரிதாபம்

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் மீட்பு.

Update: 2021-08-12 10:23 GMT

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் இன்று மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கொல்லம்பட்டியை சேர்ந்தவர் முத்து (55). இவர் ஊரில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் தேன் எடுக்க சென்றபோது அங்கு மலைத் தேனீக்கள் அவரை கடித்தில் முத்து மயக்கமுற்று ஆலமரக் கிளையிலையே சுருண்டு தொங்கியுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கந்தர்வர்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முத்துவை மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

மலைத் தேனீ கொட்டி ஆலமரத்தில் மயக்கமான நிலை ஆலமரத்தில் தொங்கியவர தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News