தொற்றில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தவ்ஹீத் ஜமாத்

அறந்தாங்கியில் கொரோனா தொற்றில் இறந்தவரின் உடலை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்அடக்கம் செய்தனர்.

Update: 2021-05-16 14:00 GMT

புதுக்கோட்டைமாவட்டம்அறந்தாங்கி அருகே செங்கரையை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுகிழமை இறந்துவிட்டார்.அந்த குடும்பத்தினர்மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு நல்லடக்கம் செய்ய கேட்டுகொண்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையுடன் தமிழக சுகாதாரத் துறையின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவரின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அறந்தாங்கி கிளை சார்பாக உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News