ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-11 01:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முகாமை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதனும் கலந்து கொண்டு, வீடு, வீடாக சென்று காய்ச்சல் பறிசோதனை செய்தார். பின்னர்  கேவிஎஸ் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் 

இந்த நிகழ்வில்இந்த ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News