கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

Update: 2021-09-23 00:15 GMT

நாகர்கோவில் அருகே பருத்திவிளையில், தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளியின் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பருத்திவிளையில் கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கந்துவட்டி கொடுமையால். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள்  தற்கொலை செய்து கொண்ட பின்னரும், கந்து வட்டிக்காரர்கள் வீட்டிற்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் வாழ்ந்த வீட்டில் நுழைந்த கந்துவட்டி கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி வீட்டை அபகரிக்க முயன்றதால்,  தொழிலாளியின் மகன், தற்போது இருக்க இடம் இன்றி தவித்து வருகிறார். பெற்றோரை இழந்த நிலையில், வீடும் அபகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி தங்க இடமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மகன், நேற்று  பொதுமக்கள் உதவியுடன் நாகர்கோவில் காவல் நிலையத்தில், இதுபற்றி புகார் அளித்தார்.

Tags:    

Similar News