நீர்வள்ளுர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை
நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் செயற்பொறியாளர் பாண்டியராஜன் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் ,
நீர்வள்ளூர் 110 / 33-11 கே.வி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அந்த நேரத்தில் இந்த துணை மின் நிலைக்கு சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் தெரிவித்துள்ளார் .
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் :
நீர்வள்ளூர் , சின்னையன்சத்திரம் ராஜகுளம் , கரூர் , அத்திவாக்கம், தொடூர் , மேல்மதுரமங்கலம், சிங்கிலிபாடி , கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம் , மதுரமங்கலம் செல்வழிமங்கலம் , சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம் , மதூர் ஆகிய கிராமங்களிலும் ,
இதேபோல் பரந்தூர் , காரை , சிறுவாக்கம், ஏகனாபுரம் , கொட்டவாக்கம், எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், துளசாபுரம் , தண்டலம் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களிலும் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.