பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தம்

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதியில், பராமரிப்பு பணிக்காக இன்று, மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-11-24 02:30 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இன்று, (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல்,  மாலை 4 மணி வரை, பெண்ணாகரம், அக்ரகாரம், மடம், சத்தியநாதபுரம், நல்லாம்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பாரப்பட்டி, பிக்கிலி, பெரும்பாலை, ஏரியூர், ஒகேனக்கல், அதகபாடி, தாசம்பட்டி, இண்டூர், ராமகொண்டஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News