அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது.

Update: 2021-09-16 05:30 GMT

ஒகேனக்கல் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான  குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெய்துள்ளது. அதன் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால், கிருஷ்ணராஜ சாகர் அணையில், 10900 இருந்து கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 12000 ஆயிரம் கனஅடி தண்ணீர் என, மொத்தம் 22 ஆயிரத்து 900கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. எனவ்இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை வினாடிக்கு  10000கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News